நமது அண்டைப் பகுதிகளில் உள்ள பெயர்ப் பலகைகளைப் பார்த்தாலே இந்திய நகரங்களில் வெளிசார்தன்மையின் முதன்மையான மொழி சாதிதான் என்பது தெரிந்துவிடும். இத்தகைய வீழ்ச்சிகளையும் தாண்டி, கிராம வாழ்க்கையை நிராகரித்து தலித் மக்கள் நகரங்களை நோக்கி நகர வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். இந்தியக் கிராமம் என்பது ‘இந்து சமூகப் படிநிலை செயல்படும் ஆலை’ என்று கூறிய அம்பேத்கர், கிராமம்தான் சாதியைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு மிகச் சரியான இடம் என்று வாதிட்டார்.
அதே நேரம், இந்தியக் கிராமத்தைச் சுயசார்பு கொண்ட, சமத்துவமும் நியாயமும் அகிம்சையும் நிறைந்த அமைப்பாகப் பார்த்த காந்தி, கிராம-சுயராஜ்யம் வழியாக மையத்திலிருந்து அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். இதைக் கடுமையாக எதிர்த்த அம்பேத்கர், இந்தியக் கிராமத்தைச் சிறந்ததாகக் கருதுவது கிராமப்புற மக்களை மேம்பட்டவர்களாகக் கருதும் காலனியச் சிந்தனை அல்லது சாதி ஆதிக்கத்தைத் தக்கவைக்கும் இந்துக்களுடைய விருப்பத்தின் வெளிப்பாடு என்று கூறினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்