சென்னை 385: ஆவணப்படம் வழியே சென்னையின் வரலாறு

By சீதைச்செல்வன்

இந்தியா முழுமைக்குமான ஆங்கிலேயரின் காலனி ஆதிக்க நடவடிக்கைகள் பலவற்றுக்குச் சென்னை மையப்புள்ளியாக இருந்தது. மற்றொருபுறம் கல்வி, மருத்துவம், நூலகம் உள்பட இந்நகரத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் நாட்டுக்கே முதல் முயற்சியாக அமைந்தன. அவ்வகையில், சென்னையின் வரலாறு என்பது இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத பகுதி. சென்னையை அறிந்துகொள்வது, பல முக்கியமான துறைகளின் தொடக்கத்தை அறிந்துகொள்வதாகும்.

இந்தப் பின்புலத்தில் ‘சென்னையின் கதை’ (The story of Madras) என்கிற ஆவணப்படம், 1600களிலிருந்து ஒரு நகரமாகச் சென்னை வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தை முக்கியமான கட்டிடங்கள், நினைவுச்சின்னங்கள் வாயிலாகப் பேசுகிறது. கட்டுமானக் கலை வல்லுநரும் ‘இன்டாக்’ (இந்திய தேசியக் கலை-பண்பாட்டு மரபுக்கான அறக்கட்டளை) அமைப்பின் சென்னைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான சுஜாதா சங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘சென்னை நாள்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள என்எஃப்டிசி தாகூர் திரையரங்கில் இப்படம் அண்மையில் திரையிடப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE