ஓவியக் கண்காட்சிகள் மட்டுமே இதுவரை நடந்து வந்த சென்னையில், அரசு சார்பில் முதன்முறையாக ஓவியச் சந்தை நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 3, 4, 5ஆகிய நாள்களுக்கு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் இந்நிகழ்வு நடந்தது. கேன்வாஸ், அக்ரிலிக், வாட்டர் கலர், மணல் வகை ஓவியங்களுடன் பல வகையான சிற்பங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை இந்நிகழ்வை ஒருங்கிணைத்தது. கலைஞர்கள் 100 பேர் பங்கேற்றனர்.
சென்னை கவின்கலைக் கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான கலைப்பொருள்களை நிகழ்வில் அதிகளவில் காண முடிந்தது. சுடுமண் (டெரகோட்டா), பீங்கான் (செராமிக்) வகைக் கலைப்பொருள்கள் பல, அவர்களது திறனுக்குச் சான்று கூறின. “கைவிரல்களால் அழுத்தி அழுத்தி வடிவத்தை உருவாக்கும் ‘பிஞ்ச்’ முறை, பல பகுதிகளைத் தனித்தனியாகச் செய்து ஒரே உருவமாக இணைக்கும் ‘ஸ்லிப் காஸ்ட்டிங்’ முறை, சுருள் முறை, ஜப்பானியத் தேநீர்ச் சடங்குகளில் இடம்பெறும் ராக்கு மண் பாண்டத் தொழில்நுட்பம் போன்றவற்றில் கலைப் பொருள்களைச் செய்துள்ளோம். உருவத்தைச் செய்வது, சுடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் கல்லூரியிலேயே செய்தோம். 300 ரூபாயில்இருந்து பொருள்கள் உள்ளன. விற்பனைப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு மாதிரிதான் உள்ளது” என விற்பனைப் பொருள்களின் மதிப்பை உணர்த்துகிறார் செராமிக் பயிலும் மாணவர் யுகேஷ்வரன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்