முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. பல்வேறு துறைகளில் முற்போக்கான பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம், கல்வி - வேலைவாய்ப்புத் துறை சார்ந்த ‘நான் முதல்வன்’, ‘தமிழ்ப் புதல்வன்’ போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
குறிப்பாக, பெண்கள் நலன் சார்ந்து ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’த் திட்டம், ‘இலவசப் பேருந்துப் பயண’த் திட்டம் ஆகியவை பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடியவை. ஆனால், இத்திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதற்கான மனித வளம் அரசுத் துறைகளில் உள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்