காந்தி இறந்த பின் அவரது உடலை ஏன் தைலப் பாடம் செய்யவில்லை என்ற சந்தேகம் திடீரென்று எழுந்தது. தைலப் பாடம் என்றால் தெரியுமா என்று ஊடக நண்பர் (40 வயது) ஒருவரிடம் கேட்டேன். “தைலம் என்றால் தைலம்; பாடம் என்றால் பாடம்” என்றார் வடிவேலு பாணியில். தெரியவில்லை என்பதை இப்படியும் சொல்லலாம் போலும். இறந்தவரின் உடலை ஒருவகை மருந்தெண்ணெயில் பதப்படுத்தி நீண்டகாலம் பாதுகாத்தலைத் தைலப் பாடம் என்று சொல்வர்.
இன்றைக்கு எவரும் அதைச் செய்வதில்லை; அரசும் அனுமதிக்காது. பழங்காலத்தில் அரசர்கள் இறந்த பின் அவர்களது உடலைத் தைலப் பாடம் செய்து பாதுகாத்ததாகத் தெரிகிறது. நம் நாட்டில் ஒரு பேரரசரைப் போல் மக்கள் செல்வாக்குடன் வாழ்ந்த காந்தி காலமானபோது, தைலப் பாடம் செய்யலாம் என்கிற வேண்டுகோள் எழாமல் போகவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்