தென் மாவட்ட மக்களுக்கு நீதி வழங்கிவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்றுடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. 1990களில் முன்மொழியப்பட்டு, மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட வழக்கறிஞர்கள், மக்களின் தொடர் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளை மதுரையில் கடந்த 2004 ஜூலை 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
தென் மாவட்டங்களின் நீதிமன்றம்: மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் இங்கு விசாரிக்கப்படுகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய, கிராமப்புறப் பின்னணி கொண்ட முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் இந்த மாவட்டங்களில் அதிகளவில் இருக்கின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்