பாதல் சர்க்கார் நூற்றாண்டு: தமிழ் நாடகங்களுக்குப் புது வடிவம் தந்தவர்!

By அம்ஷன் குமார்

உத்பல் தத், சம்பு மித்ரா போன்ற வங்க நாடகக்காரர்களை அதிகமான மக்கள் அறிந்திருந்தனர். நாடகங்கள் மட்டுமின்றித் திரைப்படங்களிலும் தோன்றியவர்கள் அவர்கள். ஆனால், அவர்களைப் போல் பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றிராதபோதும், இந்திய அளவில் அவர்களுக்கு இணையான புகழை நாடக உலகில் பெற்றிருந்த ஒரு நாடக இயக்குநர் பாதல் சர்க்கார்.

பாதல் சர்க்கார் 1925இல் பிறந்தவர். கல்கத்தாவில் நகர நிர்மாணப் பொறியாளராக அரசாங்க வேலை பார்த்துவந்தபோது, ஓய்வு நேரங்களில் அமெச்சூர் நாடகங்களில் நடித்தார். நகைச்சுவை கலந்து நாடகங்களையும் எழுதினார். நாடகங்கள் பற்றிய அவரது எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் எழுதிய ‘ஏவம் இந்திரஜித்’ நாடகம் 1962இல் மேடையேறியது. பொருளாதார, அரசியல் கொந்தளிப்பு மிக்க காலகட்டம் அது. அமல், விமல், கமல், இந்திரஜித், மானசி என்கிற கதாபாத்திரங்கள் எவ்விதத் தனித்துவ குணாதிசயங்களும் அற்றவர்களாக அதில் படைக்கப்பட்டிருந்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE