இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் பாலினச் சமத்துவமற்ற சமூகங்கள்தான் இன்றுவரை நீடிக்கின்றன. பாலினப் பாகுபாட்டின் அளவும் வடிவமும் இடத்தையும் சூழலையும் பொறுத்து மாறியிருக்கின்றனவே அன்றி, பாலின ஏற்றத்தாழ்வு இல்லாத தொழில், அமைப்பு, நாட்டைக் காண்பது அரிதினும் அரிதாக உள்ளது. எல்லாக் காலங்களிலும் அசமத்துவமான சூழல் நிலவுகிறது. ஆணைவிடப் பெண்ணுக்கு வேலைப்பளு அதிகமாகவே உள்ளது.
ஒரு மனிதர் வாழ்வதற்கு வீடு, குடும்பம், வேலை போன்றவை தேவையான அம்சங்கள். குடும்பத்துக்கு வெளியே செய்யப்படும் அனைத்து வேலைகளும் உழைப்பாக அங்கீகரிக்கப்படுகின்றன. வீட்டில் செய்யப்படும் வேலை மட்டும் உழைப்பாக அங்கீகரிக்கப்படுவதில்லை. வீட்டு வேலைகளில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர்; ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்