பிரமிளின் இளையோர் இலக்கியம்!

By விஷ்ணுபுரம் சரவணன்

தமிழ் இலக்கிய உலகில் சிறார் இலக்கியம், சிறார் இலக்கியம் தவிர்த்தவை ஆகிய இரண்டே இரண்டு பிரிவுகள்தான். ஆனால், மேலை நாடுகளில் இரண்டுக்கும் இடைப்பட்ட வயதினருக்காக இளையோர் இலக்கியம் எனும் வகைமை எழுதப்படுகிறது. பொதுவாக, 14 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு என இது பிரிக்கப்படுகிறது. சில நாடுகளில் இது வேறுபடலாம். இளையோர் இலக்கியத்தில் சாகசக் கதைகள் உள்ளிட்ட நேரடியான படைப்புகள் எழுதப்படுவதைப் போலவே, புகழ்பெற்ற நாவல்கள், சிறுகதைகளை மீள்கூறல் (Retold) முறையிலும் பல படைப்புகள் வெளியாகின்றன.

தமிழில் இப்படியான தனித்த படைப்புகள் அதிகம் இல்லையெனினும் சிலர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதையும் காண முடிகிறது. பாரதிதாசனின் ‘இளைஞர் இலக்கியம்’ எனும் நூல் 1958இல் வெளிவந்துள்ளது. மரபுப் பாடல்களின் தொகுப்பான அந்நூலின் முன்னுரையில், ‘ஐந்தாண்டுடைய சிறுவர் சிறுமியர் முதல் பல்கலைக்கழக மாணவர் வரை உள்ள எவருக்கும் இந்நூலிற் பாடல்கள் கிடைக்கும்’ எனக் குறிப்பிடுகிறார் பாரதிதாசன். அவரின் வரையறைப்படி 5 வயது முதல் 24 வயது வரை என்று புரிந்துகொள்ளலாம். ‘இளைஞர் இலக்கியம் என்று பெயரிட்டு, இதை நான் எழுதத் துணிந்தமைக்குக் காரணம், பிழைச் சொல்லின்றி மாணவர் பாட்டு கற்க வேண்டும்’ என்று தன் நோக்கத்தையும் தெளிவுபடுத்திவிடுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE