தமிழ்க் கலை இலக்கிய உலகில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எனும் ஆல விருட்சத்திற்கு வயது 50. 20,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் ஒரே இலக்கிய அமைப்பு தமுஎகசதான்.
1974 ஆம் ஆண்டில் நவம்பர் 23, 24 தேதிகளில் மதுரை திடீர் நகரில் செம்மலரில் எழுதிக்கொண்டிருந்த 35 எழுத்தாளர்கள் ஒன்றுகூடி எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கத் தீர்மானித்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய எழுத்தாளர்கள் கே.முத்தையா, ஐ.மாயாண்டி பாரதி, கு.சின்னப்ப பாரதி, பேரா. அருணன், எஸ்.ஏ.பெருமாள், டி.செல்வராஜ், அஸ்வகோஷ், காஸ்யபன், நெல்லைச்செல்வன், தணிகைச்செல்வன், மேலாண்மை பொன்னுசாமி, வேல.ராமமூர்த்தி ஆகியோர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்