கோடையிலும் கொண்டாடலாம் காவிரியை!

By தங்க.ஜெயராமன்

நீர் கொண்டுவந்தால் அது நமக்குக் காவிரி என்போம். கோடையில் நாம் கொண்டாட காவிரியில் எதுவுமே இல்லையா? தண்ணீர் காலத்தில் காவிரிக்குச் செல்பவரை, “காவிரிக்குப் போகிறார்” என்றார்கள். அவரே கோடையில் அங்கே சென்றால் “ஆற்றுக்குப் போகிறார்” என்பார்கள். தண்ணீர் இல்லாத காவிரி தன் இருப்பையே தொலைத்துக்கொள்வதைச் சொல்கிறது அந்த மொழி வழக்கு.

காவிரியைப் பாடிய கவிகள் எல்லோரும் அதன் நீர்ப் பெருக்கையே பாடினார்கள். கவி பாடுவது என்றாலே அதனதன் லட்சிய நிலையைப் போற்றுவதுதானே! நதிக்கும் நகருக்கும் மங்கலச் சொல் கூறுவது கவி மரபு. இந்த மரபிலிருந்து விலகி, கோடைக் காவிரியை யாரும் பாடியதில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE