தொண்டர்தம் பெருமை: சொல்லவும் பெரிதே!

By செய்திப்பிரிவு

மதிப்புக்குரிய ஒருவரை அடிகள் என்று அழைக்கும் வழக்கம் சங்ககாலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியத்தின் சொற்பரப்பில் ‘அடி’ இருக்கிறதே ஒழிய, மேற்சொன்ன பொருளில் ‘அடிகள்’ இல்லை. திருவடி தொழும் மரபு வந்தபோதுதான் அடிகள் என்னும் சொல்லும் தமிழில் தடம் பதிக்கிறது.

திருவடி தொழும் மரபு சமண, பௌத்தத் தாக்கத்தால் வந்தது. சிந்திக்கும் தொழிலை நடத்தும் தலையே மதிக்கத்தக்க முதன்மை உறுப்பு என்று சொல்லப்பட்ட நிலையில், உடல் மொத்தத்தையும் தாங்கிச் சுமந்து உழைப்பையும் பிழைப்பையும் நடத்தும் கால்களே முதன்மை உறுப்புகள் என்று தலைகீழாக்கம் செய்து, கால்களை மாண்அடியாகவும், திருவடியாகவும், தலையால் தொழப்படும் தன்மை உடையவையாகவும் ஆக்கிய பெருமை சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் உரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE