கலைவெளிப் பயணம் - 5: கலைப் படைப்புகளும் கலைப் பணிகளும்

By சி. மோகன்

தமிழகக் கலைவெளியில் ஒரு படைப்பாளியாகவும் செயல்பாட்டாளராகவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கமாகப் பணியாற்றி வருபவர் கீதா ஹட்சன். சுயமாகக் கற்றறிந்த ஓவியப் பயிற்சிகளிலிருந்தும் அவதானிப்புகளிலிருந்தும் தனக்கான படைப்புலகைக் கண்டடையும் பிரயாசைகளிலிருந்தும் தன்னை உருவாக்கிக்கொண்டவர். அறிதல் பயணத்தின் அத்தியாவசியமான முதல் படிநிலை, அறிந்தவற்றிலிருந்து விடுதலை பெறுவதுதான். கல்விப் புலம்சார் பயிற்சிகளை இவர் பெற்றிராததால் இந்த விடுபடுதலின் சிரமம் இவருக்கு இருக்கவில்லை. அதேவேளை, நம் மரபுக் கலைகள் - நவீன கலைகளின் வளங்களுடன் கொண்ட உறவின் செழுமையோடும் தனித்துவத் திறன்களோடும் தன்னை மேம்படுத்தியபடி, தன் கலைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் கலை ஆளுமை இவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE