கலந்தாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம்

By ஆனந்தன்

நீட் தேர்வு முடிவுகளில் காணப்பட்ட பல முரண்பாடுகள், அதன் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துவதாக இருந்தன. இந்நிலையில், தேர்வுக்குப் பிந்தைய கலந்தாய்வு முறையிலும் மாற்றம் தேவை என்கிற கோரிக்கை தமிழகத்தில் தற்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் தனித்தனிக் கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் தரவரிசை எண், இடஒதுக்கீட்டின்படி அவர்களுக்கான வாய்ப்பு, கல்லூரிக்கான அவர்களது முன்னுரிமை போன்றவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு அரசுக் கல்லூரியிலோ, தனியார் கல்லூரியிலோ இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நீட் தேர்வு அறிமுகமானதற்குப் பின்னர், அண்மைக் காலமாக ‘சாய்ஸ் ஃபில்லிங்’ (choice filling) என்பதன் அடிப்படையில், கலந்தாய்வு நடைபெறுகிறது. இணையவழியில் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் மாணவர்கள் வீட்டிலிருந்தே பங்கேற்க இயலும். அவர்களிடம் ஒரு திறன்பேசியோ, மடிக்கணினியோ இருந்தால் போதும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE