பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் தேவையான அடிப்படை வேலைகள், சடங்கு சம்பிரதாயங்களின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன. அந்தந்த ஊர்களுக்கான மருத்துவப் பணியை மேற்கொண்டு வந்த சமூகத்தினர், முடிதிருத்துநர் என்கிற தொழில் வரையறைக்குள் சுருக்கப்பட்டு விட்டனர். சலவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த வகுப்பினரிலும், தற்போது அவர்களது கடைசித் தலைமுறை அத்தொழிலை மேற்கொண்டு வருகிறது. எனினும் சடங்குகளில் இவர்களது பங்கேற்பு தவிர்க்க முடியாததாகவே உள்ளது. குழந்தை பிறக்கும்போதும் பெண் பூப்பெய்தும்போதும் சலவைத் தொழிலாளியின் ஒத்துழைப்பு அவசியம் ஆகிறது. முடி திருத்துநர்களின் உதவி இன்றி இறப்புச் சடங்குகள் நிறைவடைவதில்லை. ஒரு சிற்றூரில் இத்தகைய வேலைகளையும் சடங்குகளையும் செய்ய இருந்த கடைசி நபரும் இல்லாமல் போகும்போது என்ன நிகழும்? இப்படியொரு நிலையை எதிர்கொள்ள ஒரு கிராமம் எடுத்த முடிவையும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையும் ‘நடபாவாடை’ நாடகம் பேசுகிறது. அண்மையில் சென்னை சின்மயா நகரில் உள்ள கூத்துப்பட்டறை அரங்கில் இந்நாடகம் நடத்தப்பட்டது. தொழில்முறை அரங்கச் செயல்பாட்டாளரான சி. இராமசாமி இயக்கியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago