கற்பு குறித்து உரையாடும்போதெல்லாம், அந்த உரையாடலில் இருவர் பெயர் நிச்சயம் இடம்பெறும்; ஒருவர் சீதை; மற்றொருவர் அகலிகை. இவருமே தொன்மமாக நிலைபெற்றுவிட்ட படிமங்கள். ஆண்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள, இவ்விருவருமே தொடர்ந்து பயன்பட்டுவருகிறார்கள். வேத காலத்திலிருந்தே அகலிகையின் கதை வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டுவருகிறது. ஏனெனில், அகலிகை என்னும் இத்தொன்மம் படைப்பாளர்களின் அட்சயப் பாத்திரமாக விளங்கிவருகிறது. கற்பு என்னும் கதையாடல்தான் இன்றுவரை அகலிகையைப் பாதுகாத்து வருகிறது எனக் கருதவும் இடமிருக்கிறது. காதல், காமம் ஆகிய இரண்டு நிலைகளிலிருந்தும் அகலிகை பேசப்படுகிறாள். அகலிகையின் கற்பிழப்பைப் பலர் தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்