சின்னகுத்தூசி 90: சில நினைவுகள்

By Guest Author

இன்றைய தேதியில், திருவல்லிக்கேணி வல்லப அக்கிரகாரம் அறை எண் 13 எவ்வித ஓசையுமின்றி அமைதியாக இருக்கிறது. அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், 2011ஆம் ஆண்டுக்கு முன்புவரை அவ்வறையில் எப்போதும் பத்திரிகையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களுமாக ஏராளமானோர் குழுமியிருப்பார்கள். எந்த விஷயத்தில் ஐயம் ஏற்பட்டாலும், அவர்கள் தெளிவுபெறத் தஞ்சமடையும் ஒரே இடம், சின்னகுத்தூசி என்னும் இரா.தியாகராசனின் அந்த அறைதான். தம் நினைவாற்றலால் தன்னை நாடி வருபவர்களின் ஐயத்தை சின்னகுத்தூசி தெளிவுபடுத்துவார்.

இளம்பருவத்திலேயே நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருட்டிணன், வி.எஸ்.பி.யாகூப், ‘தண்டவாளம்’ ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால், திராவிட இயக்கக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டார். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக மேற்படிப்பைத் தொடர இயலாமல், நண்பர்களின் சிபாரிசுக் கடிதம் பெற்றுக்கொண்டு, திருச்சியில் பெரியாரைச் சந்தித்து, அவர் மூலம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். புத்தகங்களைக்கூட மணியம்மை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வறுமை அவரை வாட்டியது. ஆசிரியர் பயிற்சியை முடித்ததும் குன்றக்குடி அடிகளாரின் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி, அடிகளாரின் பாராட்டைப் பெற்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE