தொன்மம் தொட்ட கதைகள் - 9: ராமன் எனும் தொன்மம்

By சுப்பிரமணி இரமேஷ்

அத்யாத்ம ராமாயணத்தின்படி சீதையை ராமன் சந்தேகப்பட்டதும் அவளை மீண்டும் காட்டிற்கு அனுப்பியதும் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம். ராம அவதாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவே இப்படியொரு நாடகம் நிகழ்த்தப்பட்டதாக இக்காவியம் கூறுகிறது. சீதையின் மறைவிற்குப் பிறகு ராமனும் சரயு நதியில் மூழ்கி இப்பிறப்பை முடித்துக் கொள்கிறார். இந்தத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ஜல சமாதி’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் கல்யாணராமன்.

ராமன் என்ற கதாபாத்திரத்தின் போதாமைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தியே பல புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் கதை அதிலிருந்து முற்றிலும் வேறானது. ராமனின் அந்திமக் காலம் நெருங்குகிறது. ஒரு மாதத்திற்குள் ராமன் காலனிடம் சரணடைந்தாக வேண்டும். இதுவரையிலான தன் வாழ்க்கையைத் தொகுத்துப் பார்க்கிறார் ராமன். இந்த இடத்தில்தான் பிரதி, ராமனின் பக்கம் சாய்ந்துவிடுகிறது. தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறார் ராமன். கோசலை, சீதை, பரதன், அனுமன் ஆகியோரின் அன்பு ஒரு கட்டத்தில் அலுத்துவிட்டதை உணர்கிறார். தாடகைக்குச் செய்த அநீதி அவரது மனக்கண் முன் வந்துபோகிறது. சீதையை மணந்ததற்குப் பிறகே தனக்கு ஓர் அடையாளம் ஏற்பட்டதாக அவர் கருதுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE