பெரியாறு அணை மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. அணை பலவீனமாக இருப்பதாகச் சொல்லிவருகிறது கேரள அரசு. அணையின் நீர்மட்டம் இடைக்காலத்தில் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் உயர்த்துவதை எதிர்த்து வந்த கேரளம், பழைய அணையைத் தகர்க்க வேண்டும்; புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக வாதாடிவருகிறது. அதற்கான முதல் கட்டமாக, புதிய அணையினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து ஓர் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அது குறித்து விவாதிக்க, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மே 28ஆம் தேதியைக் குறித்திருந்தது. தமிழ்நாடு அரசு இதைக் கடுமையாக எதிர்த்தது. குறிப்பிட்ட நாளில் காரணம் எதுவும் சொல்லாமல் கூட்டத்தை ரத்து செய்துவிட்டது அமைச்சகம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்