தொன்மம் தொட்ட கதைகள் - 8: நல்லாள் கேட்ட கேள்வி

By சுப்பிரமணி இரமேஷ்

பாண்டிய நாட்டில் அர்ச்சுனாபுரம் பகுதியின் தலைவர் மறைவுக்குப் பிறகு, அதன் தலைமைப் பொறுப்புக்கு அவருடைய மகன் நல்லதம்பி வருகிறான். இவனது தங்கைதான் நல்லதங்காள். அண்ணன் - தங்கை உறவுக்கு எடுத்துக்காட்டாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். சிவகங்கை பகுதியைச் சார்ந்த காசிராஜன் என்பவருக்குத் தங்கையைத் திருமணம் செய்துகொடுக்கிறான் நல்லதம்பி. நல்லதங்காளுக்கு நான்கு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளுமாக ஏழு குழந்தைகள் பிறக்கின்றன.

காலம் நல்லதங்காளின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. வாழ்க்கைப்பட்ட ஊரில் மிகப்பெரிய பஞ்சம். மக்கள், கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறுகின்றனர். நல்லதங்காளும் தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குச் செல்ல முற்படுகிறாள். காசிராஜன் தடுக்கிறான். “நன்றாக வாழ்ந்தபோது நீ பிறந்த வீட்டுக்குப் போகலாம். வறுமையில் இருக்கும்போது அங்கே போவது சரியாக இருக்காது. கூலி வேலை செய்தேனும் பிழைத்துக்கொள்ளலாம்” என்கிறான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE