சிறைக்குள் புதிய வானம்: சிறைவாசிகளின் வாசிப்பு அனுபவங்கள்

By ஆனந்தன் செல்லையா

சிறை தருகிற கசப்பான உணர்வு களுக்கு ஒப்பீடு சொல்வது மிகவும் கடினம். மனித வாழ்க்கையில் சிறை என்பது முடிவாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகப் பல நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. புத்தக வாசிப்பு அவற்றில் மிகவும் பயனுள்ள நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. தமிழகத்தில் உள்ள சிறைகளில் பல ஆண்டுகளாகவே நூலகம்இயங்கிவருகிறது. 2023இல் பொதுமக்களிடமிருந்து புத்தகங்கள் நன்கொடை யாகப் பெற்றுச சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் திட்டம் தொடங்கப்பட்டது. இது சிறையில் நடந்துவரும் புத்தக வாசிப்பை இன்னும் வலுப்படுத்துவதாக அமைந்தது.

‘கூண்டுக்குள் வானம்' என்கிற அத்திட்டம் குறித்துத் தமிழ்நாடு சிறைகள் - சீர்திருத்தப் பணிகள் துறையின் டிஐஜி முருகேசன் (சென்னை சரகம்) பகிர்ந்துகொண்டார்: "குடும்பத்துக்கு வருவாய் ஈட்டித்தர வேண்டிய ஒருவர், சிறையில் இருக்கும்போது அவரும் குடும்பமும் படும் வேதனை சொல்லில் அடங்காதது. குடும்பத்தைத் தவிக்க விட்டுவிட்டோமே என்கிற வேதனையுடன் இருக்கும் சிறைவாசிகளுக்கு, அவ்வளவு எளிதாக மன அமைதியை ஏற்படுத்திவிட முடியாது. புத்தகங்கள் அவர்களுக்கு ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும். குற்றம் இழைத்த ஒருவரைத் திருத்த நிர்வாக நோக்கில் பல்வேறு செயல்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவராக உணர்ந்து திருந்த முயலுவது அவசியம். அதற்குப் புத்தகங்கள் உறுதி யாகத் துணைபுரியும். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் மக்களிடம் நூல்கள் சேகரித்தோம். புதிய நூல்களையோ, ஏற்கெனவே பயன்படுத்திய நூல்களையோ அவர்கள் தரலாம். சிறைத் துறை சார்பாக நிகழ்வில் வைக்கப்பட்ட பெட்டியில் அவர்கள் இடும் நூல்களைத் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள நூலகங்களுக்குப் பகிர்ந்து அனுப்புவதுதான் இந்தத் திட்டம். இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE