‘‘செயற்கை நுண்ணறிவின் சிக்கலான பயன்பாடுகளுக்கு மனிதர்கள் தேவை!” - முத்து நெடுமாறன் நேர்காணல்

By ச.கோபாலகிருஷ்ணன்

கணினியிலும் இணையத்திலும் திறன்பேசிகளிலும் தமிழ் எழுத்துகள் நுழைவதற்கும் பரவலானதற்கும் முக்கியப் பங்காற்றிய முன்னோடிகளில் ஒருவர், மலேசியத் தமிழரான முத்து நெடுமாறன். இவர் உருவாக்கிய எழுத்துருக்களும், கணினிகள், திறன்பேசிகள் போன்றவற்றில் தமிழ் எழுத்துகளை உள்ளிடுவதற்கான தமிழ் முரசு அஞ்சல், செல்லினம் போன்ற மென்பொருள்களும் பரவலாகப் பயன்பாட்டில் இருப்பவை. சென்னையில் நடந்த கணித்தமிழ் மாநாடு 2024இல் உரையாற்ற வந்திருந்தவரிடம் கலந்துரையாடியதிலிருந்து...

அச்சுக் கருவிகள் மட்டுமே பரவலாக இருந்த காலத்திலிருந்து குரல்பதிவை எழுத்தாக மாற்றுதல் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பமுன்னேற்றத்தின் காலம்வரை நீங்கள் தொடர்ந்து இயங்கிவருகிறீர்கள். இந்தப் பயணத்தின் பல்வேறு கட்டங்களில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? - தொடக்கத்தில் கணினி என்றால் ஆங்கிலத்தில்தான் பயன்படுத்த வேண்டும் என்னும் மனநிலை தமிழ் மட்டுமல்லாமல், பிற இந்திய மொழிகளைப் பேசியவர்களிடமும் இருந்தது. ஆனால் சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் அந்நாட்டு மொழியைப் பயன்படுத்த முடியாவிட்டால், அந்தக் கணினியை அங்கு விற்கவே முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE