கணித்தமிழ்ப் பயணத்தில் ஒரு திருப்புமுனை

By சே.ரா.காந்தி

தமிழர்கள் தமிழை உணர்வுபூர்வமாகக் கருதும் அதே வேளையில், அறிவியல் மனப்பான்மையுடனும் அதை அணுகுகிறார்கள். அந்த அணுகுமுறையே அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, தமிழுக்கும் புதுக் குருதி பாய்ச்சிக்கொண்டேயிருக்கிறது. இந்தப் பணியானது இடைவிடாது தொடர் சங்கிலியாக மேற்கொள்ளப்படுவதாலேயே தொழில்நுட்பப் பயணத்தில் தமிழ் தொய்வில்லாமல் பயணப்படுகிறது.

எண்ணையும் எழுத்தையும் கண்ணெனப் போற்றினார் ஔவை. எழுத்து - மொழி தொடர்பானது; எண் - கணக்கு தொடர்பானது. இந்த இரண்டிலும் தமிழர்கள் வல்லமை பெற்றிருந்தார்கள். ‘தமிழ் எண் கணித முறை பொ.ஆ.மு. (கி.மு.) 3000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார் வளையாம்பட்டு கு.வெங்கடாசலம் ‘தமிழர் கணக்கியல்’ நூலில்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE