மயன்மார் உள்நாட்டுப் போர்: என்ன செய்ய வேண்டும் இந்தியா?

By மு.இராமனாதன்

பொதுவாகவே இந்தியாவின் எல்லைப் பிரச்சினை என்றால் சீனா, பாகிஸ்தான்தொடர்பாகத்தான் அதிகமாகப் பேசப்படுகிறது. கெடுவாய்ப்பாக, அந்த வரிசையில்இப்போது மயன்மாரும் சேர்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவையும் மயன்மாரையும் பிரிக்கும்எல்லைக்கோடு நீளமானது, 1,643 கி.மீ. அது மிசோரம், நாகாலந்து, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. மயன்மாருக்குச் சீனாவோடும் 2,129 கி.மீ.நீண்ட எல்லை இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக மயன்மார் ராணுவ அரசின் படைகளுக்கும் ஆயுதம் தாங்கிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. களம்: இந்தியாவையும் சீனாவையும் தொட்டு நிற்கும் மயன்மாரின் எல்லைப்புற மாநிலங்கள். இந்தப் போரில் சமீப காலமாகப் போராட்டக் குழுக்களின் கரம் ஓங்கி வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE