கவிதைகளில் சிறகை விரிக்கும் பறவை

By Guest Author

கொங்குவேளிர் எழுதிய உதயண குமார காவியத்தில் ‘சரபம்’ எனும் பறவை பற்றிய குறிப்பு வருகிறது. அப்பறவைக்கு இரண்டு முகங்கள், எட்டுக் கால்கள், முப்பத்து இரண்டு கைகள் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு பறவை இருந்ததாகவோ இருப்பதாகவோ தகவல் இல்லை. கற்பனையில் உருவான பறவையே அது என்றாலும், அதற்கு ஒரு பெண்ணையே தூக்கிக்கொண்டு பறக்கும் வலிமை உண்டென்று காவியத்தில் சித்திரித்துள்ளதை நம்பத்தான் வேண்டும். சரபம், தனக்குள்ள எட்டுக் கால்களில் நான்கை நடக்கவும் நான்கைப் பறக்கவும் பயன்படுத்தும் எனத் தெரிகிறது.

இரண்டு முகங்களில் ஒன்று யானையின் சாயலையும், மற்றொன்று, சிங்கத்தின் சாயலையும் கொண்டிருக்கும் என்கின்றனர். யதார்த்தத்தில் அறிய முடியாத ஒன்றை, கற்பனையில் சிருஷ்டித்து அதற்குப் பக்தியையும் சக்தியையும் ஏற்றுவதுதானே இலக்கியத்தின் வேலை. அதன்படி, கொங்குவேளிர் வடமொழி நூலான ‘பிருஹத் கதா’வில் உள்ளதை அப்படியே தமிழில் பெயர்த்துக் கொடுத்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE