நோபல் 2023: இலக்கியம் | ஆழ்மனத்தின் சிதறல்கள்

By சரவணன் மாணிக்கவாசகம்

இலக்கிய நோபல் விருதாளர் ஜான் போஸ்ஸே நார்வேயில் பிறந்தவர். கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எல்லாத் தளங்களிலும் இயங்குபவர். பல விருதுகளைப் பெற்றவர். ‘செப்டாலஜி’ (Septology) நாவலின் மூன்றாம் பாகத்தின் கடைசிப் பகுதி குறித்தது இது; ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதால் இது செப்டாலஜியானது (Septology). சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கரின் (2022) இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த நாவல் இது.

வாசகர்களின் அதிகபட்சக் கவனத்தைக் கோரும் நாவல் இது. எழுத்தாளர் பா.வெங்கடேசன் பாணியில் முற்றுப்புள்ளியே இல்லாத வரியில் எழுதப்பட்ட நாவல் என்பது முதற் காரணம். தன்னிலையிலும் படர்க்கையிலும் மாறி மாறிக் கதை நகர்வது இரண்டாவது காரணம். அடுத்ததாக, அஸ்லே என்ற ஓவியர் தன் வயதான காலத்தில், பழைய நினைவுகளை அசைபோடுவதுபோல் நகரும் கதையில் நிகழ் காலமும் கடந்த காலமும் ஒன்றுடன் ஒன்று கலந்து வருகின்றன. இது மூன்றாவது காரணம். இந்த மூன்று காரணங்கள் பரவாயில்லை. இந்தக் கதை நடக்கும் அதே ஊரில் இன்னொரு அஸ்லேயும் இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவரும் ஓவியர். அவர் கதையும் இந்த ஓட்டத்தில் கலந்துகொள்கிறது. ஆசிரியர் இதற்கெல்லாம் விளக்கம் எதுவும் சொல்லாதபோதும் இரண்டாவது அஸ்லே முதல் அஸ்லேவின் மாற்று எனக் கொள்ளலாம். ஆனால், இந்த இரண்டாவது அஸ்லேவும் முதல் அஸ்லேவும் வெவ்வேறு பெண்களை மணமுடித்து விவாகரத்தும் செய்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE