நான் ஒருபோதும் நன்கு படிக்கும் மாணவனாக இருந்ததில்லை. கற்றலில் குறைபாடு இருந்ததால், அவமானங்களைத் தாங்க வேண்டியிருந்தது. பள்ளியிலும் வீட்டிலும் மதிப்பிழந்தேன். சிரமத் திற்கிடையில், எட்டாம் வகுப்பில் இரண்டு வருடங்கள் இருக்க முடியாமல் வெளியேறினேன். தொடக்கத்தில் ஊர் சுற்றுபவனாகவும் பேப்பர் பொறுக்குபவனாகவும் இருந்தேன். ரயில் நடைமேடைகளில் தூங்கிக் கழித்தேன். அதன்பின் கட்டிடத் தொழிலாளியாகவும் கருவாட்டுக் கிடங்குகளில் கூலியாகவும் உப்பளங்களில் வேலை செய்பவனாகவும் இருந்தேன்.
என் தந்தை பலவேசம் களிமண் சிற்பக் கலைஞர். தாய் லெட்சுமி நூற்பாலைத் தொழிலாளி. என்னையும் அவர் நூற்பாலையில் சேர்த்துவிட்டார். மூன்று வருடங்கள் வேலை பார்த்த பின், நிரந்தரத் தொழிலாளி ஆனேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸிலும் உறுப்பினரானேன். அப்போது நானும்செய்தித்தாள் வாசிக்க ஆரம்பித்தேன். விட்ட கல்வியையும் தொடர முடிந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்