அஞ்சலி: பயாஸ்கோப்காரரின் மரணம்

By கே.பாலமுருகன்

ஒரு பயாஸ்கோப்காரன் தன் பயாஸ்கோப் வழியாகக் குழந்தைகளை மகிழ்விப்பதுபோல், சை.பீர்முகம்மது தனது இலக்கியப் படைப்புகள் வாயிலாகச் சமூகத்தின் பலதரப்பட்ட முகங்களையும் அவர்களுக்குள் திரண்டுகிடக்கும் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் முரண்களையும் துயரங்களையும் தொடர்ந்து காட்சிப்படுத்திச் சென்றவர். ஜனவரி 11, 1942இல் பிறந்த (மலேசியா, ஜப்பானியர் ஆட்சியில் இருந்த காலக்கட்டம்) பீர்முகம்மது 26.09.2023 அன்று காலமானார்.
மலேசியாவில் ஜப்பானிய ஆட்சி ஐந்தாண்டுகள் நடைபெற்ற காலக்கட்டத்தில் பிறந்து, சிறுவயதில் ஜப்பானியர்களின் கூடாரத்தில் வீரர்களுக்குக் கிடைக்கும் உணவை உண்டு, வாழ்வை நடத்திய பால்யப் பின்னணி கொண்டவர் மலேசிய மூத்த தமிழ் எழுத்தாளர் சை.பீர்முகம்மது. அவரது தந்தை சயாம் மரண ரயில் பாதை அமைக்கப்படுவதற்குப் பிடித்திழுத்துச் செல்லப்பட்ட பின், சில வருடங்களில் தாயாரும் இறந்துவிட்டார். அதன் பின்னர், ஏழு வயதில் பழைய சென்ட்ரல் திரையரங்கத்திற்கு முன்னே உள்ள உணவகத்தில் தட்டுகளைக் கழுவும் வேலை செய்து, அதன்வழி அவரது சிறு வயது அனுபவங்கள் உருவாகியுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE