கலைவெளிப் பயணம் - 1: வண்ணங்களின் மாய வசீகரமும் மந்திர அதிர்வுகளும்

By சி. மோகன்

நவீன ஓவியக் கலை வளர்ச்சியில் முற்றிலும் புதிதான ஒரு பிராந்தியத்தைக் கண்டடைந்த கலை வடிவம், அரூப ஓவியம். ஒரு புதிய அனுபவ வெளிக்குப் பார்வை யாளரை அது அழைத்துச் செல்கிறது. நவீன ஓவியத்தின் அடிப்படை அம்சங்களில் மிகவும் பிரதானமானது, வண்ணங்களின் சுதந்திரம். இச்சுதந்திர வெளிப்பாட்டில் ஓவியர் விஸ்வத்தின் அரூப ஓவியங்கள், வண்ணங்களின் மகத்தான இசைக்கோவையாக மிளிர்கின்றன.

தோற்றங்களில் தென்படும் வண்ணங்களை அவர் பிரதிபலிப்பதில்லை. மாறாக, வாழ்வின் நெடுகிலும் மனம் கிரகித்த எண்ணற்ற நிலவெளிக் காட்சிகளும் வான்வெளிக் காட்சிகளும் கடல்வெளிக் காட்சிகளும் இவருடைய படைப்புகளில் புதுப் புதுக் கோலங்கள் கொள்கின்றன. படைப்பாக்கத்தின்போது, மனக் காட்சிகளாக விரியும் அவற்றை மறு உருவாக்கம் செய்தபடியே, அவர் தன் படைப்பு வெளியில் பயணம் செய்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE