எழுத்தாளர் ஆனேன்: கண்மணி குணசேகரன் | வட்டார வழக்கு மாறிப் போன கதை

By Guest Author

உளுந்தூர்பேட்டையில் ஐடிஐபடிக்க சைக்கிளில் செல்லும்போது, ஒரு நாள் அதிகாலையில் சாலையோரம் பொட்டைமண் பூசிக்கிடந்த நொச்சிச் செடியைப் பார்த்து எழுத ஆரம்பித்த வகையில் எனக்கு அறிமுகமானது கவிதை. தொடர்ந்து நண்பர்களுக்காகக் காதல் கவிதைகளை எழுதி, பேராசிரியர் த.பழமலய் உடனான சந்திப்புக்குப் பின்னால் மண் சார்ந்த மக்கள் மொழியில் அது உருமாற்றம் கொண்டது.

கிராமத்து நாவிதர்களின் பாடுகளைச் சொல்லும் ஒரு கவிதையை நூலுக்குத் தலைப்பாகக்கொண்டு ‘தலைமுறைக் கோபம்’ எனும் கவிதைத் தொகுப்பு 1994 வெளிவந்தது. அந்தக் கவிதைத் தொகுப்பிற்குக் கவிதாசரண் எழுதிய ஓர் அறிமுகக் கட்டுரையில், சுள்ளி பொறுக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கவிதையைப் பெருமாள்முருகனின் ‘திருச்செங்கோடு’ தொகுப்பில் வரும் ஒரு கதையோடு ஒப்பிட்டிருந்தார். அதன் மூலம் ‘திருச்செங்கோடு’ தொகுப்பை வாங்கவும் உடன் படிக்கவும் எனக்கு வாய்த்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE