இளமையில் என் தாயை இழந்ததுதான் வாசிப்பு நோக்கி நான் நகரக் காரணமாக இருந்திருக்கும் என்று இப்போது யோசிக்கையில் தோன்றுகிறது. என் தனிமையின் அடர்த்தியை நீர்த்துப்போகச் செய்ததில் பிரதான இடம் வாசிப்பிற்கே. ஒருவேளை, வாசிப்பை நான் தேர்வுசெய்யாமல் போயிருந்தால், என் வாழ்வு சூனியமாகி இருக்கும்.
மேல்நிலைக் கல்வி முடித்து, தொண்ணூறுகளின் மத்தியில் மேற்படிப்பிற்காகப் புதுவைக்குச் சென்றேன். அங்கு நாடகத் துறையில் ஆய்வு மாணவராக இருந்த ஷிபு கொட்டாரத்தின் நட்பு கிடைத்தது. அவர்தான் ‘சுபமங்களா’வையும் ‘நிறப்பிரிகை’யையும் எனக்கு வாசிக்கக் கொடுத்தார். அந்தச் சரடைப் பற்றிக்கொண்டு, என் வாசிப்பைக் கூர்மையாக்கிக்கொண்டேன். மேலும், அவருடைய ‘ஆப்டிஸ்ட்’ நாடகக் குழுவில் இணைந்து பணியாற்றியது, எனக்கு வேறு பல வாயில்கள் திறக்கக் காரணமானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்