பசுவும் எருதும் பெருங்கூட்டமாக மெல்ல நகர்ந்து செல்லும் காலையில், தாய்ப் பசுக்களின் கால்களுக்கு ஊடாகக் குறுக்கும் மறுக்குமாகச் சப்தமிட்டுக்கொண்டே செல்லும் கன்றுகள், மெல்லப் பெரிதாகும் எருதின் குரல், கழுத்தில் கட்டியிருக்கும் மணிகளின் சப்தம், அகலமான நீண்ட தெரு முழுக்க எழும் மந்தையோசை, மண்தூசு, மந்தையோட்டியின் அதட்டும் குரல், சாணி போடும் சத்தம் எனப் பல்வேறு குரல்களுடனும் சப்தங்களுடனும் தன் முற்பகலைத் தொடங்கும் எளிய கிராமம்.
ஊர் எல்லையில் ஏழூரைக் காக்கும் மாகாளி வாசியம்மன் என வயல்வெளிகள் தொடங்கும். சிறு வயது முழுக்கப் பல்வேறு விளையாட்டுகளால் நிறைந்திருந்தது. நவீன கால விளையாட்டுகள் கிராமங்களுக்கு வந்திராத காலம் அது. கோலிக்குண்டு, பம்பரம், கிட்டிப் புள், மாண்டா, கபடி என மாதந்தோறும் ஒவ்வொரு விளையாட்டாக மாறிக் கொண்டிருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்