முன்னெப்போதும் இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரித்துவருவது மனிதகுலத்தின் முதன்மைப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ஜூலை மாதத்தில் பதிவான வரலாறு காணாத வெப்பநிலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கும் ஐ.நா. அவையின் பொதுச் செயலர் அண்டோனியோ குட்டர்ஸ், புவி வெப்பமாதல் கட்டத்தில் இருந்து உலகளாவிய கொதிநிலையின் சகாப்தத்தை உலகம் கடந்துவருவதாகக் குறிப்பிட்டார்.
வரும் காலத்தில் இது மேலும் திகிலூட்டக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார். செப்டம்பரில் நடைபெறவிருக்கும் காலநிலை உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, வளர்ந்த நாடுகள் 2040ஆம் ஆண்டுக்கு முன்னதாகவும், வளர்ந்துவரும் நாடுகள் 2050க்கு முன்னரும் நிகர பூஜ்ய கார்பன் (net zero carbon) நிலையை அடைவது குறித்து உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்