அறிவியலும் கவிதையும் தொடர்ந்து விரிவுகொண்டு வருபவை. உள்ளுணர்வு, அனுபூதி போன்ற தூண்டல்களில் அறிவியலும் அறிவார்த்தம், தர்க்கம், கணிதம் போன்ற உறுதிகளில் கவிதையும் ஊக்கம்பெற்ற தருணங்கள் நிகழ்ந்தது உண்டு. கவிதையில், புனைவில், அறிவார்த்தத்தின் இடம் என்பது திறந்து பேச வேண்டிய ஒரு பொருள்.
அறிவு – உணர்வு, சிந்தனை – கற்பனை, மனம் - உடல், யதார்த்தம் - புனைவு, படைப்பு - செய்நுட்பம் போன்ற காலாவதியான எதிரிடைகள் ஒரு விவாத சந்தர்ப்பம் என்றாலும் படைப்பு என்ற மொழி ஆகிருதிக்குள் இணைந்து ஒரே குருதியாகவே பாய்கிறது. ஒரு தாவரத்துக்குள், நுண்ணுயிருக்குள், ஒரு செல்லுக்குள் அறிவும் கற்பனையும், சிந்தனையும் படைப்பூக்கமும், நினைவும் சரீரமும் பிளவுபடாத ஒருமையிலிருக்கின்றன என்பதைக் கருத வேண்டும். கவிதை ஒரு தனிமனித அந்தரங்க அறிதல், உள்ளுணர்வின் வெளிச்சம், தன்னிலையின் கரைதல் என்கிற வாதங்கள் இன்று பழுப்படைந்துவிட்டவை. அனுபவத்திலிருந்து விலகி நிற்றலும், அவதானித்தலும், அறிவார்ந்த வேடிக்கையும்கூட அதன் உறுதிகள்தாம். நவீன கவிஞன் எப்போதும் கவிதையைச் செய்து பார்ப்பவனாக, கவிதைக்கு வெளியே நிற்கும் பரிசோதனையாளனாக இருக்கிறான். மனித அறிதலின் அறுதிகளை, அதன்மீது கட்டப்பட்ட ஒற்றை மெய்யை மீறிச் செல்லும், பின் நவீன அறிகளங்களுடன் ஊடாடும் இன்றைய அறிவியல், தன்னைத் தானே தாண்டிக் குதித்தும் செல்கிறது. அங்கு விஞ்ஞானம் கவிதையின் மொழிக்குள் புகுந்துவிடுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago