காதியைக் காப்பாற்றுவோம்!

By அனந்து

காதி என்றதும் நம் மனதில் தோன்றும் முதல் பிம்ப‌ம், மகாத்மா காந்திதான். கூடவே, இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் அதற்கு உள்ள தொடர்பும் நம் நினைவுக்கு வரும். காதி என்னும் மதிப்புக்குரிய இந்தக் கலை நமது பாரம்பரியம், கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது. இது, சமூகங்கள், குடும்பம் சார்ந்த‌ துணி உற்பத்தி செய்யும் ஒரு பழங்கால வழிமுறை, ஏன் வாழ்க்கை முறையும்கூட. மேலும், அருகமைப் பொருளாதாரத்தைச் சிறப்பாகவும் பரவலாகவும் நிலைநிறுத்தும் வழிமுறையாகவும் இது திகழ்கிறது.

ஒன்றிணைந்த கைகள்: கிராமங்களில் விவசாயிகள் பருத்தியை வளர்த்தனர். அங்கு நூற்ப‌தற்காகப் பெண்களுக்கு நூல் வழங்கப்பட்டது. நூலானது நெசவாளர்களுக்கு ஆடை நெய்ய அனுப்பப்பட்டது. அவர்கள் திறமையாகவும், படைப்பாற்றலுடனும் அதை ஆடையாக வடிவமைத்தனர். உள்ளூர் வாழ்வாதாரமும் அருகமைப் பொருளாதாரமும் பரந்துவிரிந்தன. இந்த இரண்டு விழுமியங்கள் காந்திக்கும் அவரது பொருளாதாரத் தத்துவத்தை வடிவமைத்த ஜே.சி.குமரப்பாவுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்ந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE