ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - 5: முன்னுதாரணமில்லாத நாவல்

By Guest Author

ஒரு நியாயமான வக்கீலின் புறக்கணிக்க முடியாத கூர்மையான வாதங்களைப் போலக் கதாபாத்திரங்களின் உரையாடலில் ஒரு செறிவான தர்க்கத்தைக் கவித்துவமாகக் கட்டியெழுப்பிய ஜெயகாந்தன், பாரதி சொன்னதைப் போலப் புனைகதையின் உரைநடையிலும் தமிழை வெடிப்புறப் பேச வைத்தவர்.

சப்த சங்கீதம் என்ற சொல்லால் அவரைப் புரிந்துகொள்வது பொருத்தமானதாகலாம். வெளியிரைச்சல்களைத் தாண்டி உள்ளமைதியைச் சாத்தியப்படுத்துவதில் ஜெயகாந்தனின் எழுத்து ஒரு நூதனத்தன்மையைத் தன்னியல்பாகக் கொண்டிருக்கிறது. இதற்கான அசைக்க முடியாத உதாரணம்தான் - ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. நாவலிலிருந்து ‘கதை’யை வெளியேற்றுவது பற்றிப் பின்நவீனத்துவர்கள் தமிழில் பேசத் தொடங்கிய 1990களுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே அந்தப் படைப்புச் சாதனையை மேற்சுட்டிய தம் நாவல்வழி சிறப்பாகச் சாதித்துவிட்டவர் ஜெயகாந்தன். ஐம்பது ஆண்டுகளைத் தாண்டிய பிறகும் அந்த நாவல் இன்றும் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்பது, சாதாரணமான ஒரு விஷயமல்ல.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE