எது உண்மையான சமச்சீர்க் கல்வி?

By சு.உமாமகேஸ்வரி

தமிழ்நாட்டில் புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களும் தொடங்கிஇருக்கின்றன. இந்தச் சூழலில், அவர் கொண்டுவந்த சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பள்ளிகளில் கடந்த 13 ஆண்டுகளாகச் சமச்சீர்க் கல்வி பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு வரலாறு உண்டு. 2006 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் ‘சமச்சீர்க் கல்வி’ கொண்டுவரப்படும்’ என திமுக அறிவித்திருந்தது. தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியும் அமைத்தது. அதைத் தொடர்ந்து முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒரு நபர் குழுவின் ஆய்வறிக்கை, இது தொடர்பாக ஆராய்வதற்கு குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்குக் கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வுசெய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், 2010இல் ‘தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம்’ சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1 முதல் 6 வகுப்புகளுக்கான சமச்சீர்க் கல்விப் பாடநூல்கள் 2010இல் அறிமுகப்படுத்தப்பட்டன. 2011இல் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு, சமச்சீர்க் கல்வியைத் தடைசெய்தது கடும் எதிர்வினைகளைப் பெற்றது. நீதிமன்றத் தலையீட்டின் வழியாக மீண்டும் அது நடைமுறைக்கு வந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE