சொல்… பொருள்… தெளிவு | 2,000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதன் காரணம்

By முகமது ஹுசைன்

இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மக்கள் இந்த நோட்டுகளை 2023 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, 2016இல் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நினைவூட்டுகிறது. எனினும், தற்போதைய அறிவிப்பால் சாமானிய மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது என்றே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2,000 ரூபாய் நோட்டு: 2016 நவம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு [Demonetisation] நடவடிக்கையைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மற்ற ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்ததால், புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது 2018-19இலிருந்து நிறுத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE