ஒவ்வோர் ஆண்டும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், படிப்பு - தேர்வு தொடர்பான மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகவே இருப்பது வேதனைக்குரிய விஷயம். முன்பெல்லாம் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் வரும் நாளில், தோல்வியடைந்த மாணவர்களில் சிலர் தற்கொலை செய்துகொண்ட செய்திகளைக் கடந்துவந்திருக்கிறோம். இப்போது, எதைப்படிக்க வேண்டும் என்கிற பெற்றோரின் வற்புறுத்தலால் தற்கொலைகள் நடப்பதைப் பார்க்க முடிகிறது.
15 வயது மாணவன் ஒருவன் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டான். 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் வேளையில், மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு ஏற்ற பாடப்பிரிவை பிளஸ் 1 சேர்க்கையில் எடுக்க வேண்டும் என அம்மாணவனின் பெற்றோர் அவனை வற்புறுத்தியதுதான் இந்த முடிவுக்குக் காரணம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அவலங்களைத் தவிர்க்க, கல்வி விஷயத்தில் குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டி வழிநடத்த வேண்டிய பொறுப்பு பொதுச் சமூகத்துக்கு இருக்கிறது. கூடவே, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைய வேண்டிய பொறுப்பும் உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்