நூறு நாள் வேலைத் திட்டத்தில் உடலுழைப்புச் செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி, மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. எங்கள் கிராமத்து டீக்கடையில் அச்செய்தியை வாசித்த ஒரு விவசாயி, ‘சரிதான்... இதுகளுக்குச் சம்பள உயர்வு வேறயா?’ என்று கடுப்புடன் சொன்னார்.
‘மரத்தடி நிழலில் உறங்கி எந்திரிச்சு வாறதுக்குச் சம்பள உயர்வு அவசியந்தான்’ என்று இன்னொருவர் பக்க மேளம் வாசித்தார். ‘ஏழை எளியதுக பொழச்சுட்டுப் போட்டுமேன்னு யோசிக்க மாட்டீங்களா?’ என்று நான் குறுக்கே பாய்ந்தேன். ‘ஏழைகளா... இவங்கள்லாம் போன்ல ஆர்டர் போட்டுத் தினம்தினம் மதியம் பிரியாணி வாங்கிச் சாப்டுறாங்க தெரியுமா?’ என்று என் பந்தைத் திருப்பி அடித்தார் முதலாமவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்