தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கும் விவகாரத்தை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கான அங்கீகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருந்த அனைத்து மனுக்களையும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதற்கு எதிர்வினையாக மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இடையிலான திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக விழுமியங்களிலும் பல்வேறு மதங்களின் தனிச் சட்டங்களுக்கு இடையிலான சமநிலையிலும் பெரும் சேதத்தை விளைவித்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்