மாணவியருக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துமாறு டெல்லியைச் சேர்ந்த சைலேந்திர மணி திரிபாதி பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தார். அந்த மனுவைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நபர் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
மனுவை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கேவியட் மனு தாக்கல் செய்தார். மாணவியின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அதைக் குறிப்பிட்டனர். ‘பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும்பட்சத்தில் பெரும்பாலான நிறுவனங்களில் இதைக் காரணம்காட்டிப் பெண்களை வேலைக்கு எடுக்கத் தயங்குவார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்