சங்க இலக்கியங்களை அதிகமாக மொழி பெயர்த்த அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி. 13 நூல்களை மொழிபெயர்த்துள்ளார்; இரு நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகவில்லை. ஆக 15 சங்க இலக்கிய நூல்களை மொழிபெயர்த்த ஒரே பேராசிரியர் தட்சிணாமூர்த்திதான். இவரது இப்பணிக்காக, சாகித்திய அகாடமி நிறுவனம் ‘பாஷா சம்மான்’ விருதை அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான விருது இது. இதற்கு முன் இவ்விருதை பேராசிரியர்கள் கா.மீனாட்சிசுந்தரம் (2013),
ச.வே.சுப்பிரமணியன் (1999) ஆகியோர் பெற்றுள்ளனர். சாகித்திய அகாடமி வழங்கும் விருதுகளில் இதுவே முதன்மையானது. சாகித்திய அகாடமி தலைவரும் செயலாளரும் பரிசு பெறும் அறிஞர் இருக்கும் இடத்துக்கே வந்து இவ்விருதை வழங்குவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்