சீரழிவுக்கு வித்திடும் கிரிக்கெட் விதிமுறைகள்

By டி.கார்த்திக்

சர்வதேசக் கிரிக்கெட்டில், ஒரு நாள் (50 ஓவர்) போட்டிகள் பிரபலமாகத் தொடங்கிய 1980-90களில் மட்டையாளர் ஒருவர், ஒரு போட்டியில் 150 ரன்களைக் கடப்பதே அரிதான நிகழ்வாக இருந்தது. ஏனென்றால், அன்று கிரிக்கெட் விதிகளும் ஆடுகளங்களும் மட்டையாளர் - பந்து வீச்சாளர் என இரு தரப்பினருக்கும் சமமான சவாலை உருவாக்கும் வகையில் இருந்தன.

ஆனால், மட்டையாளர் ஒருவர் 200 ரன்களைக் கடப்பது இன்று எளிதாகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்திய வீரர்கள் இருவர் இஷான் கிஷான் (210), சுப்மன் கில் (208) ஒரு நாள் போட்டிகளில் 200 ரன்களைக் கடந்திருக்கிறார்கள். 2010இல் குவாலியரில் நடந்த போட்டியில், முதன் முறையாக 200 ரன்களை விளாசினார் சச்சின் டெண்டுல்கர். அதன் பிறகு, கடந்த 12 ஆண்டுகளில் 10 பேர் இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார்கள்; இதில் 7 சதங்கள் இந்தியர்களிடமிருந்து வந்தவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE