ஒளிர்ந்துகொண்டிருந்த இலங்கை இருளில் மூழ்கிப் பல மாதங்களாகின்றன. இலங்கும் நாடு என்பதால் ‘இலங்கை’ எனப் பெயர் கொண்ட இலங்கைத் தீவில் இப்போது ஒளி இல்லை. நாற்புறமும் நீரால் சூழப்பட்ட இலங்கை நாடு, இப்போது கடன்களால் சூழப்பட்ட நாடாக, பசியால் சூழப்பட்ட நாடாக அறியப்படுகிறது. நீந்திக் கடந்தாவது இத்தீவைவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்கிற விரக்தி நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் நெருக்கடி: இலங்கையில் தமிழர் தேசம், சிங்கள தேசம் என்ற இரண்டு தேசங்கள் அங்கீகரிக்கப்படுமானால் அதுவே இலங்கைத் தீவின் பலமும் வளமுமாகும் என்று போராளிகள் நம்பினார்கள். முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில், தமிழர் தரப்பிடமிருந்து வடக்கு கிழக்கைப் பெற்று இலங்கையுடன் இணைத்துக்கொண்டதாக, அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச பெருமைப்பட்டார். ஆனால், இன்று தங்கள் பகுதிகளைவிட்டே சிங்கள மக்கள் புலம்பெயர்கின்றனர். எங்களிடமிருந்து நாட்டைப் பறிக்க வேண்டும் என நினைத்தார்கள். இறுதியில் அவர்களும் வாழ முடியாத நிலை உருவாகிவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்