‘சிற்பி திட்டம்’ ஓர் எதிர்வினை! - சென்னை பெருநகர காவல் துறை

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியான (22.09.22) ‘சிற்பி திட்டம் எழுப்பும் கேள்விகள்!’ கட்டுரை எழுப்பியிருந்த கேள்விகளுக்குப் பின்வரும் விளக்கங்களை அளிக்கிறேன். எந்தத் திட்டமாக இருந்தாலும் முதலில் தவழ்ந்து, பிறகு நடந்து, பின்பே ஓடத் தொடங்கும். அது சிற்பிக்கும் பொருந்தும். சிற்பி திட்டம் காவல் துறையின் முயற்சிகளில், மாணவர்களின் கடமை என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு, அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பரிசோதனை முயற்சி. இது ஏற்படுத்தும் தாக்கத்தையும் விளைவுகளையும் கொண்டு, படிப்படியாக மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். போதைப் பழக்கத்தைச் சிறார்களிடம் தடுப்பதே சமூகம் சீர்படுவதற்கான வாய்ப்பு. அந்த அடிப்படையில், போதைக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் போதை ஒழிப்பு என்பது ஒரு வழி, அதுவே முழுமையான வழியல்ல. இது சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்திற்கு மாற்றுத் திட்டம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வாரத்திற்கு ஒரு மணி நேரம் மட்டுமே நடத்தப்படும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE