1949 நவம்பரில் டெல்லியில் நடைபெற்ற அரசமைப்பு அவையின் முதல் நிறைவு உரையில், இந்தியர்கள் தங்கள் மதத்தைவிட நாடே உயர்வு எனக் கருதுவார்களா? அல்லது நாட்டைவிட மதமே உயர்வு எனக் கருதுவார்களா என அம்பேத்கர் கேள்வி எழுப்பினார். அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு ஏற்படுத்தும் ஆபத்துகளையும், சமூக ஜனநாயகத்தை உறுதிப்படுத்தாத அரசியல் ஜனநாயகத்தின் ஆபத்துகள் குறித்தும் அந்த உரையில் அவர் எச்சரித்தார்.