பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு குருஷேத்திரப் போரைத் துரோணர் தலைமையேற்று நடத்துகிறார். பதின்மூன்றாம் நாள் யுத்தத்தில் யுதிஷ்டிரனைச் சிறைப் பிடிக்க துரோணர் பத்மவியூகம் அமைக்கிறார். யுதிஷ்டிரனுக்காக உருவாக்கப்பட்ட பத்மவியூகத்தில் அபிமன்யு மாட்டிக்கொள்கிறார். பத்மவியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே செல்லத் தெரிந்த அவருக்கு, வெளியேறும் வழி தெரியவில்லை. துரோணர், கிருபர், சகுனி, கர்ணன், அஸ்வத்தாமன், கிருதவர்மன் உள்ளிட்ட கௌரவர் படையால் கொடூரமாகக் கொல்லப்படுகிறார் அபிமன்யு.
பெரும் துயரமடைந்த சுபத்திரை, அபிமன்யுவின் மறைவுக்குத் தன் அண்ணன் கிருஷ்ணனே காரணம் என்கிறார். போரின் நிறைவில் இறந்துபோனவர்களுக்காக நீர்க்கடன் செலுத்தப்படுகிறது. அந்நாளில் சுபத்திரைக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்தான் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘பத்மவியூகம்’ கதையின் மையம். பாரதப் பிரதிகளில் இந்த உரையாடல் இல்லை. ஜெயமோகன்தான் சுபத்திரை கதாபாத்திரத்தின் வழியாக இதை நடத்துகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்