ஆசிரியர்கள் போராடும் சூழல் முடிவுக்கு வரட்டும்!

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி போராட்டங்கள் நடப்பது கவலை அளிக்கிறது. தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் பேசுபொருளாகியிருக்கிறது. இத்தகைய போராட்டங்களால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏறக்குறைய 80,000 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் ஏறக்குறைய 60 சதவீதத்தினர் பெண்கள். இவர்கள் கடந்த பத்தாண்டுகளாகவே பல்வேறு கோரிக்கைகளைப் பள்ளிக் கல்வித் துறையிடம் முன்வைத்து வருகின்றனர். கடைசியாக அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இடைநிலை ஆசிரியர்களது ஊதியம் மட்டும் உயர்த்தப்படாமலே உள்ளது; அதை உயர்த்த வேண்டும் என்பது அவர்களது முதன்மையான கோரிக்கை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE