வக்ஃபு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. சிறுபான்மையினரின் விவகாரங்களில் தலையிடும் வகையிலும், அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்த வழிசெய்யும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பின்னணி என்ன?- இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், செல்வந்தர்கள், மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் பெருகத் தங்கள் பகுதியில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரால் தானமாக வழங்கப்பட்டவையே வக்ஃபு சொத்துக்களாகும். அவை அசையும் சொத்துக்களாகவும், அசையாச் சொத்துக்களாகவும் இருக்கின்றன. இந்தச் சொத்துக்களைக் கண்காணிப்பதற்காகவும், அதில் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டங்களை அரசு 1954இல் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்களிலும் வக்ஃபு வாரியங்கள் 1958இல் ஏற்படுத்தப்பட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்